Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுனாமியில் சிக்கியவர்களை மீட்ட உயர்நீதிமன்ற நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

The scene in coastal area

சென்னையில் சுனாமி அலைகள் தாக்கியபோது பலரை மீட்டும், மீட்புப் பணிகளை முன்னின்று நடத்தியும் சப்தமில்லாமல் உதவிசெய்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன்.

சென்னையில் பட்டினப்பாக்கம் பகுதியில்தான் முதல் சுனாமி அலை தாக்கியது. பட்டினப்பாக்கம் பகுதியில் ஏராளமான அரசு ஊழியர்கள்குடியிருக்கிறார்கள். அதேபோல, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளும், அருகாமையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில்அமைச்சர்களின் வீடுகளும் உள்ளன.

கடந்த 26ம் தேதி சென்னை நகரில் சுனாமி தாக்கியது. சுனாமி தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் காலை 9.30 மணிக்கு தனதுகுடியிருப்பிலிருந்து கடற்கரைக்கு விரைந்தார் நீதிபதி பி.டி.தினகரன். அவருடன் குடியிருப்பில் வசித்து வரும் பல்வேறு நபர்களும்சென்றனர்.

பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் அலையில் சிக்கித் தவித்தவர்களை, தினகரனும், மீனவர்களும் சேர்ந்து மீட்கத் தொடங்கினர்.போலீஸாரும், மீட்புப் படையினரும் அப்போது வந்திருக்கவில்லை.

இதையடுத்து காவல்துறை ஆணையருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூடுதல் காவல்துறையினரை அனுப்புமாறு தினகரன்கேட்டுக் கொண்டார். தீயணைப்பு படையினருக்கும் அவரே தகவல் சொல்லி விரைந்து வரும்படி கூறியுள்ளார்.

போலீஸ் பற்றாக்குறை காரணமாக தினகரனே, மீட்புப் பணியை தலைமையேற்று மீனவர்களின் உதவியுடன் பலரையும் மீட்டுகாப்பாற்றியுள்ளார். வயதான ஆண்கள், பெண்களை தினகரனே தூக்கிக் கொண்டு வந்து பாதுகாப்பான பகுதியில் விட்டதாக சாந்தோம்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

முதல் அலை வந்து சென்ற பின்னர் பல உடல்கள் கரைக்கு மிதந்து வந்துள்ளன. அந்த உடல்களையும் தினகரன் மற்றும் மீனவர்கள் எடுத்துவந்து சாந்தோம் சாலையில் உள்ள பிளாட்பாரத்தில் வைத்துள்ளனர்.

இந்த சமயத்தில் 10.15 மணிக்கு இரண்டாவது அலை வந்துள்ளது. இந்த அலையில் தினகரன் உள்ளிட்ட சிலர் சிக்கிக் கொண்டுள்ளனர்.தினகரன் தண்ணீர்த் தொட்டி ஒன்றின் மீது ஏறிக் கொண்டு தப்பியுள்ளார். இருப்பினும் அவர் ஏறிக் கொண்ட தண்ணீர்த் தொட்டியைச்சுற்றிலும் கடல் நீர் அதிக அளவில் நின்றுள்ளது. அது வடிந்த பின்னரே தினகரன் அங்கிருந்து நகர முடிந்துள்ளது.

நீதிபதி தினகரனின் இந்த தீரச் செயல் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. மீட்புப் பணி சரியாக நடக்கவில்லை, நிவாரணம் சரியாகதரப்படவில்லை என்று குறை கூறிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது நீதிபதி தினகரனின் மனிதநேயச் செயல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+