For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 நாட்களாக மரத்தில் வாழந்தவர் உயிருடன் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

கார் நிக்கோபார்:

A man Surviving on tree-top for 10 day

சுனாமி அலைகள் தாக்கியபோது உயிர் பிழைப்பதற்காக மரத்தில் ஏறியவர் 10 நாட்கள் உணவு மற்றும் நீர் இன்றி உயிர் வாழ்ந்த அதிசயம்கார் நிக்கோபார் தீவில் நிகழ்ந்துள்ளது.

அந்தமான் தீவுகளில் சுனாமி அலைகள் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியபோது உயிர் பிழைப்பதற்காக மரம் மற்றும் உயரமான பகுதிகளில்மக்கள் ஏறினார். அவ்வாறு மரம் ஏறியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளியும் ஒருவர்.

கடந்த 10 நாட்களாக அவர் கீழே இறங்கவேயில்லை. உணவு, நீர் இன்றி மரத்தில் வாடிய அவர் உடல்நலம் குன்றி கீழே விழுந்தார்.

அவரை இராணுவத்தினர் மீட்டனர். அவருக்கு மகாராஷ்டிராவிலிருந்து வந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சதாயே சிகிச்சைஅளித்தார்.

அந்த டாக்டர் கூறுகையில், நீண்ட நாட்கள் மரத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கியதால் களைப்படைந்து அவர் கீழே விழுந்தார். அவருக்குஉடனடியாக திரவு உணவு அளித்து, போர்ட் பிளேயரில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

உணவு, நீர் இன்றி ஒரு மனிதர் இத்தகை சூழ்நிலையில் பத்து நாட்கள் உயிரோடிருந்தது எப்போதாவது நிகழும் அபூர்வமாகும் என்றுகூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X