For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் மீனவர்களை தவிக்கவிடும் ஆந்திர அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Central ministers meerakumari amd Subbulakshmi jagadesan visits affected area in Pondichery

ஆந்திர மாநிலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நெல்லூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் எவ்வித நிவாரணஉதவியும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

இம் மாவட்டத்தின் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள்வசிக்கிறார்கள். சமீபத்தில் தாக்கிய சுனாமி அலைகளுக்கு இந்த மீனவர்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் சுனாமிக்குப் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 40 மீன் பிடி படகுகள், வலைகள் சுனாமிஅலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இவர்கள் ரூ. 1 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

கடுமையாக பாதிக்கப்பட்ட இவர்களுக்கு ஆந்திர அரசின் சார்பில் குடும்பத்துக்கு தலா 25 கிலோ அரிசி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.வேறு நிவாரண உதவி எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடமும், அரசியல் தலைவர்களிடமும் முறையிட்டும்இதுவரை யாரும் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.

இத்தனைக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியைய் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர்பார்வையிட்டும் சென்றுள்ளனர்.

இருப்பினும் இவர்களை ஆந்திர காங்கிரஸ் அரசு புறக்கணித்து வருகின்றது.

தங்களுககு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் உதவி செய்ய வேண்டும் என்று இந்த தமிழ் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X