உடல்களை அடையாளம் காண புதிய ஏற்பாடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த பலரது உடல்களை அடையாளம் காண தமிழக அரசு புதிய ஏற்பாட்டைசெய்துள்ளது.
வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கானோர் சுனாமி தாக்குதலில் சிக்கிப் பலியானார்கள். இந்த உடல்கள்புதைக்கப்பட்டுவிட்டாலும் கூட, இவர்களில் பெரும்பாலானவர்களின் அடையாளம் தெரியவில்லை.
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை இழந்து இன்னும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பவர்கள், இந்த உடல்களின்புகைப்படங்களைப் பார்த்து விவரம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக வேளாங்கண்ணியில் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இந்த உடல்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தப் புகைப்படங்கள் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பார்த்து உடல்களை அடையாளம் காட்டி இறப்புச்சான்றிதழைப் பெற்றுச் செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கான இணையத் தள முகவரி: www.helpmilan.info
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04365 - 263100













Click it and Unblock the Notifications