டாஸ்மாக் கடைகளை மூட மகளிர் ஆணையம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Expert team visits the affected area

தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு மாதத்திற்கு மூட வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர்வசந்தி தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வசந்தி தேவி விடுத்துள்ள அறிக்கையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பான விற்பனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வருத்தம் தருவதாக உள்ளது.

அரசு தரும் உதவிப் பணத்தை மது அருந்த சிலர் பயன்படுத்துவது வேதனை தருகிறது. இதன் மூலம் அரசின் நிவாரணப் பணம் வீணாகிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, சுனாமி நிவாரணப் பணிகள் முடியும் வரை அல்லது 1 மாதத்திற்கு டாஸ்மாக் கடைகளை இந்தப்பகுதிகளில் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு விசேஷ பராமரிப்பு அவசியம். அவர்களுக்கு சத்துணவுடன்கூடிய பராமரிப்புக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வசந்தி தேவி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+