For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமியால் ஆழமான சென்னை துறைமுகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Marrina meach

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மனித உயிர்களுக்கும் சுனாமி அலைகள் மிகப் பெரும் சேதத்தை விளைவித்துள்ள நிலையில்சென்னை துறைமுகத்திற்கு மிகப் பெரிய நன்மையை செய்து விட்டுச் சென்றுள்ளது.

சென்னை துறைமுகத்தை ஆழப்படுத்தியதுதான் சுனாமி செய்துள்ள மிகப் பெரிய நன்மை. சுனாமி தாக்குதலுக்குப் பிறகுசென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது சுனாமியின் அதி வேக அலைகளின் காரணமாக சென்னை துறைமுகம் 2 மீட்டர் அளவுக்குஆழப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பதிமெட் என்ற முறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், சென்னை துறைமுகத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள கடல் மற்றும்துறைமுகத்தின் உட்புறம் உள்ள 2 கப்பல் நிற்கும் தளங்கள் ஆழமடைந்துள்ளன.

டிசம்பர் 26ம் தேதி வீசிய சுனாமி அலைகள் காரணமாக 4 முதல் 5 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிலான மணல், குப்பைகள்போன்றவை கடலுக்கு அடியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்கனவே 17.4 மீட்டர் ஆழமுடைய சென்னைதுறைமுகத்தின் வெளிப்புற கடல் பகுதி தற்போது 2 மீட்டர் அளவுக்கு கூடுதல் ஆழமடைந்துள்ளது.

இதேபோல, அம்பேத்கர் மற்றும் பாரதி கப்பல் நிற்கும் தளங்களிலும் ஒரு மீட்டர் அளவுக்கு கடல்

ஆழமடைந்துள்ளது. இதன் மூலம் 18.6 மீட்டர் ஆழமுடைய உள்பகுதி தற்போது 19.6 மீட்டர் ஆழமாக மாறியுள்ளது.

சுனாமியின் காரணமாகவே கடல் ஆழப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது மிகப் பெரிய அற்புதம் என்றும் கடலியல் நிபுணர்கள்கூறுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X