For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோட்டை முன் உண்ணாவிரதம்: எம்எல்ஏ கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தலைமைச் செயலகம் (கோட்டை) முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி சுயேச்சைஎம்.எல்.ஏ. அப்பாவு இன்று கைது செய்யப்பட்டார்.

தனது தொகுதியைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கக் கோரி ராதாபுரத்தில்சமீபத்தில் அப்பாவு போராட்டம் நடத்தினார்.

இந் நிலையில் இன்று கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து சட்டசபை விடுதியில்உள்ள அப்பாவுவின் அறைக்கு முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

காலை 10 மணியளவில் உண்ணாவிரதம் இருப்பதற்காக அப்பாவு வெளியே வந்தபோது அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

சமீபத்தில் குவாரி தொடர்பான ஒரு விவகாரத்தில் அப்பாவு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X