சுனாமி: 1.15 மீ. நகர்ந்துவிட்ட போர்ட்பிளேர்
போர்ட்பிளேர்:
நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைத் தாக்குதல்களால் அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேர், 1.15 மீட்டர்நகர்ந்துவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுனாமி அலையால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
அங்கு தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் போர்ட்பிளேர் நகரம் 1.15 மீட்டர் நகர்ந்துள்ளதாக இந்திய புவியியல் ஆய்வுதலைமை அதிகாரி பிரித்விநாக் தெரிவித்தார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எங்களது ஆய்வின் முடிவில் போர்ட்பிளேர் முன்பிருந்த இடத்தில் இருந்து 1.15 மீட்டர் தென்கிழக்கு திசையில் நகர்ந்திருப்பதுதெரியவந்தது. மேலும் கடல்நீர் மட்டம் 1.5 மீட்டர் உயர்ந்து விட்டது. தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்துவருகிறோம்.
தீர்க்க ரேகை, பூமத்திய ரேகையில் இருந்து அந்தமான் விலகி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்தான் அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் வரைபடத்தை மீண்டும் வரைய வேண்டுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். அதற்கு இன்னும் 2மாதங்கள் ஆகும் என்று கூறினார்.