ஜெயலட்சுமி..பஞ்சு வியாபாரி.. மீண்டும் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalakshmiரூ. 40 லட்சத்துக்கு பஞ்சு வாங்கிவிட்டு காசைத் தராமல் தன்னை ஜெயலட்சுமி மோசடி செய்து விட்டதாக சென்னையில் உள்ள சட்டம்ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.வி.எஸ். மூர்த்தியிடம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த பஞ்சு வியாபாரி பிரகாஷ்மூர்த்தி என்பவர் புகார்கொடுத்துள்ளார்.

20க்கும் மேற்பட்ட போலீஸார் தன்னை பாலியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் சீரழித்து விட்டதாக ஜெயலட்சுமி கொடுத்துள்ளபுகாரின் பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலட்சுமியை ஏதாவது வழக்கில் மாட்டிவிட போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த வகையில் தான் சங்கரன்கோவிலைச் சேர்ந்த பிரகாஷ்மூர்த்தி தன்னிடம் ஜெயலட்சுமி ரூ. 40 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறிவருகிறார்.

இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள், தென்மண்டல காவல்துறைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோரிடம் அவர் ஏற்கனவே அவர் புகார்கொடுத்துள்ளார். இந் நிலையில் இன்று சென்னைக்கு வந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.வி.எஸ்.மூர்த்தியிடம் புகார் கொடுத்தார்.

பின்னர் பஞ்சு பிரகாஷ்மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பஞ்சு கொள்முதல் செய்த வகையில், ரூ. 40 லட்சம் வரை என்னிடம் ஜெயலட்சுமி பண மோசடி செய்துள்ளார். இந்தப் பணத்தை நான்கேட்டபோதெல்லாம் எனக்கு மிகப் பெரிய காவல்துறை அதிகாகளைத் தெரியும். அவர்களை வைத்து உன்னை உண்டு இல்லை என்றுசெய்து விடுவேன் என மிரட்டினார்.

இந்த மோசடி குறித்து ஏற்கனவே சிபிஐ, தென்மண்டல ஐ.ஜி. ஆகியோடம் புகார் கொடுத்துள்ளேன். தற்போது கூடுதல் டிஜிபியிடம் புகார்கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை விட மாட்டேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+