பாபர் மசூதி இடிப்பு: அத்வானி, உமாவுக்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
லக்னெள:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்களான அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு லக்னெள உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவர்களைத் தவிர விஎச்பி தலைவர்களான அசோக் சிங்கல், விஷ்ணு ஹரி டால்மியா, ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் ஆகியோர் உள்பட 20பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதை பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்துமாறும்சிபிஐக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications