For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டர் சட்டம்: மறு ஆய்வு குழுவுக்கு செல்ல சங்கரமடம் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Kanchi Mutt சங்கர மட முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் தம்பி ரகு ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்பட்டதை எதிர்த்து மறு ஆய்வுக் குழுவில் விண்ணப்பிக்க சங்கர மடம் முடிவு செய்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 25 பேரில் 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைதாகியுள்ளனர்.இவர்களில் சுந்தரேச அய்யரும், ரகுவும் முக்கியமானவர்கள். இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதை சங்கர மடம்கடுமையாக கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கர மட வழக்கறிஞர் தியாகராஜன் கூறுகையில், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், கள்ளச்சாராயம்காய்ச்சி விற்பவர்கள், ரெளடித்தனம் செய்பவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து அந்தக் குற்றங்களை செய்து வந்தால் மட்டுமே குண்டர்சட்டத்தைப் பிரயோகிக்க முடியும்.

ஆனால் வெறும் குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே ஆளாகியுள்ள சுந்தரேச அய்யர், ரகு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது கடும்கண்டனத்துக்குரியது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து குண்டர் சட்ட மறு ஆய்வுக் குழுவில் முறையிட உள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X