For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 பேரை ரயிலிலிருந்து தள்ளி கொன்ற ராணுவத்தினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் 5 பேரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிக் கொன்ற ராணுவ வீரர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி- கான்பூர் இடையே செல்லும் பராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் ராணுவ வீரர்கள் இருந்த பெட்டியில் சில பயணிகள் ஏறினர்.அவர்களை இறங்குமாறு ராணுவத்தினர் கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பயணிகளில் 6 பேரை ராணுவத்தினர் ரயிலிலிருந்துதள்ளி விட்டனர்.

அப்போது மற்றொரு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சம்பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில் 5 பேர் இறந்தனர்.இதில் ஒரு பெண்ணும் அடக்கம். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசம் மாநிலம் சிக்கோகாபாத் ரயில்நிலையம் அருகே நடந்தது.

பயணிகளைத் தள்ளிவிட்ட 3 ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். ராணுத்தினர்ராஜ்புதனா ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்ஆவர்.

காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த ராணுவ அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X