5 பேரை ரயிலிலிருந்து தள்ளி கொன்ற ராணுவத்தினர் கைது

Subscribe to Oneindia Tamil

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் 5 பேரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிக் கொன்ற ராணுவ வீரர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி- கான்பூர் இடையே செல்லும் பராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் ராணுவ வீரர்கள் இருந்த பெட்டியில் சில பயணிகள் ஏறினர்.அவர்களை இறங்குமாறு ராணுவத்தினர் கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பயணிகளில் 6 பேரை ராணுவத்தினர் ரயிலிலிருந்துதள்ளி விட்டனர்.

அப்போது மற்றொரு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சம்பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில் 5 பேர் இறந்தனர்.இதில் ஒரு பெண்ணும் அடக்கம். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசம் மாநிலம் சிக்கோகாபாத் ரயில்நிலையம் அருகே நடந்தது.

பயணிகளைத் தள்ளிவிட்ட 3 ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். ராணுத்தினர்ராஜ்புதனா ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்ஆவர்.

காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த ராணுவ அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+