சுனாமி: தெற்காசியாவில் பலி 2,27,00 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா:

The scene in Cudalore

இந்தோனேஷியாவில் மேலும் 7,000 பேர் பலியானதாக வந்த தகவலையடுத்து தெற்காசியாவில் சுனாமியால் இறந்தவர்களின்எண்ணிக்கை 2,27,000 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேஷியாவில் மேலும் 7,000 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு மட்டும்சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,73,981 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் 30,920 பேர் இறந்ததாகவும், மேலும் 5,565 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10,744 பேர் உயிரிழந்ததாகவும், 5,669 பேரைக் காணவில்லை என்றும் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.காணாமல் போனவர்கள் இறந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

தாய்லாந்தில் 5,373 பேர் பலியாகியுள்ளனர். 1,000 வெளிநாட்டவர்கள் உட்பட 3,000 பேரைக் காணவில்லை.

மியான்மரில் 59 பேர் பலியானதாக அந்நாட்டு பிரதமர் சூ வின் தெரிவித்துள்ளார். ஆனால் 90க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம்என்று ஐ.நா. சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலத்தீவில 82 பேர் இறந்துள்ளனர். மேலும் 26 பேரைக் காணவில்லை. மலேசியாவில் 68 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில்பெரும்பான்மையோர் பினாங் தீவைச் சேர்ந்தவர்கள்.

ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சோமாலியாவில் 298 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும்பலியாகியுள்ளனர்.

சுமத்ராவில் இன்றும் நிலநடுக்கம்:

இதற்கிடையே இன்று காலை சுமத்ரா தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 10.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+