பூகம்ப வதந்தியால் சென்னை பள்ளிகளில் பீதி!
சென்னை:
சென்னையில் பூகம்பம் ஏற்பட்டதாகவும், சில பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்துவிட்டதாகவும் பரப்பப்பட்ட வதந்தியால்பெற்றோர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
சுனாமி அலைத் தாக்குதலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே வதந்திகள் கணக்கில்லாமல் பரப்பப்பட்டு வருகின்றன. இந் நிலையில்நேற்று சென்னை நகரின் பல பள்ளிகளில் பிற்பகலுக்கு மேல் பூகம்ப வதந்தி பரவியது.
நகரில் நல நிடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பல கட்டடங்கள் இடிந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. குறிப்பாக ராயபுரம் பகுதியில் உள்ளஇரண்டு பள்ளிகளும், சாந்தோமில் உள்ள பள்ளியும் நில நடுக்கத்தால் இடிந்து விழுந்துவிட்டதாக புரளி கிளம்பியது.
இதையடுத்து இப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அலறியபடி ஓடி வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
பூகம்பம் ஏதும் ஏற்படவில்லை, பிள்ளைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும்எவ்வளவோ எடுத்துக் கூறியும் பெற்றோர்கள் கேட்காததால், இரு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்குத்திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதேபோல தண்டையார்ப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பூகம்ப பீதி காரணமாக பல பள்ளிகள் விடுமுறைவிடப்பட்டன.












Click it and Unblock the Notifications