சுனாமி: மீனவர்களுக்கு ரூ. 396 கோடி கடனுதவி
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவ ரூ. 396 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மீனவர்களுக்கு கட்டுமரங்கள் வாங்க தலா ரூ. 32,000 மானியமாக வழங்கப்படும். மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் கட்டுமரங்கள்,நாட்டுப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வாங்க வழங்கப்படும் ரூ. 52,600ல் 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
இயந்திரப் படகுகள் வாங்க வழங்கப்படும் ரூ. 5 லட்சத்தில் 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும். சேதமடைந்த கட்டுமரங்களைபழுதுபார்க்க வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 5,000லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இயந்திரப் படகுகளைப் பழுதுபார்க்க வழங்கப்படும் ரூ. 3 லட்சத்தில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதித் தொகையை வங்கிக்கடனாக 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கட்டுமரங்கள் மற்றும் இயந்திரப் படகுகள் வாங்க முழு அளவு மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன். இது தொடர்பாக கடந்த 23ம் தேதி மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரிடம் பேசியிருக்கிறேன் என்றுகூறியுள்ளார்.