For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணா கொலை: ராஜாவுக்கு முழு தொடர்பு

By Staff
Google Oneindia Tamil News

ஆலங்குளம்:

Rajaஆலடி அருணா கொலை வழக்கில் கைதான ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்சிக்கியுள்ளதாக நெல்லை சரக டிஐஜி கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அருணா கொலை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட எஸ்.ஏ. ராஜா, ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து நேற்றுநள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டார். ராஜாவிடம் டிஐஜி கோபால கிருஷ்ணன், எஸ்.பி. ஆனந்த்குமார் சோமானி ஆகியோர் தீவிரவிசாரணை நடத்தினர்.

சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.பி. பிரேம்குமார் ஸ்டைலில், இந்தக் கொலை வழக்கில் கைதான கூலிப் படை ஆசாமிவேல்துரையையும், எஸ்.ஏ.ராஜாவையும் எதிரெதிராக உட்கார வைத்து மாறி மாறி கேள்விகள் கேட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.

பின்னர் எஸ்.ஏ. ராஜா தூங்க கட்டில், தலையணை கொண்டு வரப்பட்டது. ஆலங்குளம் காவல் நிலையத்திலேயே அவர் தூங்கினார்.

இன்று காலை 6 மணிக்கு அவர் தென்காசி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலை 10.10 மணிக்கு தென்காசி நீதிமன்ற நீதிபதிஅனில்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை வருகிற 9ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதிஉத்தரவிட்டார். இதனையடுத்து எஸ்.ஏ. ராஜா பாளையங்கோட்டை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதேபோல் வேல்துரையும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக விசாரணைக்கு இடையே கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்தக் கொலை வழக்கில் எஸ்.ஏ. ராஜாவுக்கு முக்கியத் தொடர்பு உள்ளது தெரியவருகிறது. அதற்கான வலுவான ஆதாரங்களும்சிக்கிவிட்டன.

இவரது கைதின் மூலம் ஆலடி அருணா கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. வழக்கு தொடர்பான முழு விவரங்களும்இன்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் தெரிவிக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X