தமிழகத்தில் நாளை கடையடைப்பு
சென்னை:
லாரி வாடகை மீதான சேவை வரி வணிகர்கள் மீது சுமத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும்என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
லாரி புக்கிங் ஏஜெண்டுகளின் போராட்டத்தால் லாரி வாடகை மீதான சேவை வரி, வியாபாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால்ரூ.750க்கு மேல் லாரி வாடகை செலுத்தும் நிலை வருடத்தில் ஒரு நாள் ஏற்பட்டாலும், சிறுவியாபாரிகள் கூட கலால் வரித் துறையிடம்பதிவு செய்து சேவை வரி செலுத்த வேண்டும்.
கணக்குகள் காட்ட வேண்டும். அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக வேண்டும். இதைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும்கடையடைப்பு நடத்தப்படும். கடையடைப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
அதை வணிகர்கள் நம்பி குழப்பமடைய வேண்டாம். திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications