செல்போன் எஸ்டிடி கட்டணம் குறைகிறது
டெல்லி:
செல்போன் எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி. கட்டணங்கள் நாளை முதல் (பிப்ரவரி 1ம் தேதி) குறைக்கப்படுகின்றன.
செல்போன்களிலிருந்து தொலைதூரத்திற்குப் பேசுவதற்கான கட்டணத்தைக் குறைத்து இந்திய தொலைபேசிஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) உத்தரவிட்டது. இதை எதிர்த்து மகாநகர் டெலிபோன் நிகாம் நறுவனம்(எம்.டி.என்.எல்.) தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இந்தப் புகாரை விசாரித்த தொலைத் தொடர்பு தீர்ப்பாயம், ட்ராய் அறிவித்த கட்டணக் குறைப்பு சரியானதே என்றுதீர்ப்பளித்தது.
இருப்பினும் இந்த அறிவிப்பு இடைக்கால அறிவிப்புதான் என்று அறிவித்துள்ள தீர்ப்பாயம் இந்தப் பிரச்சினைதொடர்பாக பிப்ரவரி 24ம் தேதி மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.
இப் பிரச்சனை தொடர்பாக ஒருங்கிணைந்த இந்திய தொலைபேசி சேவை அமைப்பு தீர்ப்பாயத்தில் தாக்கல்செய்திருந்த மனுவை, அப்பீல் மனுவாக தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இருப்பினும் செல்போன் எஸ்டிடி மற்றும் ஐஎஸ்டி கட்டணங்ள் நாளை முதல் குறைக்கப்படுகின்றன.