For Daily Alerts
Just In
அண்ணா சமாதியில் ஜெ. கருணாநிதி அஞ்சலி
சென்னை:
அறிஞர் அண்ணாவின் 36வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா, திமுகதலைவர் கருணாநிதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக சேப்பாக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான திமுகவினர் கருணாநிதியின் தலைமையில் ஊர்வலமாகஅண்ணா சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களுடன் வந்து அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார்.
எம்ஜிஆர் களகத் தலைவர் இராம.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், மக்கள் நலஉரிமைக்கழக நிறுவனர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
Comments
Story first published: Thursday, February 3, 2005, 5:30 [IST]