சுனாமி: 1.5 லட்சம் வீடுகளுக்கு மின்கட்டணம் ரத்து
சென்னை:
சுனாமி பாதித்த பகுதிகளில் 1.5 லட்சம் வீடுகளுக்கு மின்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின் துறைஅமைச்சர் விசுவநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது திமுக உறுப்பினர்புகழேந்திக்குப் பதிலளித்து விசுவநாதன் கூறியதாவது:
தமிழகத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் வீட்டு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று புகழேந்தி கூறினார். சுனாமிபாதித்த மறுநாளே இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்து விட்டார்.
அந்த உத்தரவுப்படி, சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்கிய 1.5 லட்சம் வீடுகளுக்குமறு உத்தரவு வரும் வரை மின் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர முழுமையாகப் பாதிக்கப்படாதவர்கள் 3தவணைகளில் மின் கட்டணத்தைச் செலுத்தும் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications