தமிழகம் முழுதும் பகுதி நேர ரேசன் கடைகள்
சென்னை:
ஒரு பகுதியில் 200 குடும்ப அட்டைகள் இருந்தால் அப் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படும் என்று அமைச்சர் பொள்ளாச்சிஜெயராமன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பகுதி நேர ரேஷன் கடை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளித்து கூறியதாவது:
200 குடும்ப அட்டைகள் இருந்தால் அந்தப் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கலாம். அதே நேரத்தில் 2 ரேஷன் கடைகளுக்குஇடையே குறைந்தது 2 கி.மீ. தூரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
200 குடும்ப அட்டைகள் இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்தால், அந்தப் பகுதிகளில் பகுதி நேர ரேஷன்கடைகள் திறக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 37.7 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இதனையடுத்து கேள்வி நேரத்தின்போது, 200 குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை அரசே கண்டறிய வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள்கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications