அஸ்ஸாம், நாகலாந்தில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
கெளகாத்தி:
அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 2 நொடிகள் நீடித்தது. இது குறித்து ஷில்லாங்கில் உள்ள நில அதிர்வுஆராய்ச்சி மையம்,
அஸ்ஸாம், நாகலாந்து மாநிலங்களில் எல்லையோரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.44 மணிக்கு நிலநடுக்கம்ஏற்பட்டதால் பெரும்பாலான மக்கள் தூக்கம் காரணமாக இதை உணரவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டதாகவோ, பொருட்சேதம் நிகழ்ந்ததாகவோ இதுவரை தகவலில்லை.
இது இந்தப் பகுதியில் வழக்கமாக உணரப்படும் நிலநடுக்கம் தான். சுனாமி அலைகளை ஏற்படுத்திய டிசம்பர் 26நிலநடுக்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications