அண்டார்டிகா: விஞ்ஞானிகளுக்கு கலாம் வாழ்த்து
டெல்லி:
அண்டார்டிகா பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர்மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்தி
அண்டார்டிகாவில் உள்ள இந்திய அறிவியல் தளத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல்சென்றுள்ளார். அவருடன் தொலைபேசியில் பேசிய அப்துல் கலாம்,
அண்டார்டிகா பகுதியில் இந்திய விஞ்ஞானிகள் பல்வேறு அறிவியல் சோதனைகளை நடத்தி வருகிறார்கள். மிகவும் மோசமானதட்ப வெப்ப நிலையில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்.
அண்டார்டிகா பகுதியில் அவர்கள் கற்றுக் கொண்டதை இமயமலைப் பகுதிகளில் வாழ்பவர்களின் நலனுக்குப் பயன்படுத்தவேண்டும். உலக நலனுக்கு உதவும் வகையில் ஏராளமான செல்வங்கள் அண்டார்டிகா பகுதியில் இருப்பதை அறிவியல் சமூகம்உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
மன்மோகன் சிங் கபில் சிபலிடம், அண்டார்டிகா பயணம் மேற்கொண்டிருக்கும் 23வது மற்றும் 24வது இந்தியக் குழுவின் நலன்குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களது பல்வேறு முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.