For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவிகளிடம் செக்ஸ் குறும்பு: தலைமை ஆசியர் கைது

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் குன்னத்தூர் அருகே மாணவிகளிடம் அத்துமீறி நடந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

குன்னத்தூர் அருகே உள்ள சூரியப்பபாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் அருணாச்சலம். 53வயதாகும் இவர், தனது பள்ளியில் 5-வது வகுப்புப் படிக்கும் தவறான இடங்களில் மாணவிகளை தொட்டு சில்மிஷம் செய்து வந்துள்ளார்.

இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் குன்னத்தூர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

போலீஸார் புகாரைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குட்டு அம்பலமானதால் அருணாச்சலம் தலைமறைவானார். அவரதுசேட்டைகள் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் விசாரணை மேற்கொண்டார். அதில் அருணாச்சலம் செக்ஸ் விளையாட்டில்ஈடுபட்டது உறுதியானது.

இதைத் தொடர்ந்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந் நிலையில், திருச்சியில் பதுங்கியிருந்த அருணாச்சலம், ஈரோடுமாவட்டம் செங்கப்பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் பெருந்துரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அருணாச்சலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாள் காவலில் பெருந்துரை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X