பதர் சயீத்துக்கு புதிய பதவி
சென்னை:
தமிழக வக்பு வாரிய தலைவரான பதர் சயீத், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வக்பு வாரிய தலைவராக இருந்து வந்த பதர் சயீத் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மீண்டும் வக்பு வாரியத் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
மூத்த வழக்கறிஞரான பதர் சயீத் தற்போது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுநியமிக்கப்படும் 3வது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதர் சயீத்.
பதர் சயீத் தற்போது வக்பு வாரியத் தலைவர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், எஸ்.ஐ.இ.டி கல்லூரி இணைச் செயலாளர்ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.
தற்போது அட்வகேட் ஜெனரலாக என்.ஆர்.சந்திரன் உள்ளார். கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக முத்துக்குமாரசாமி, ஏ.எல்.சோமையாஜி ஆகியோர் உள்ளனர்.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகள் பதர் சயீத்துக்கு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications