சுனாமி: ஜெ. புகாருக்கு ராணுவம் மறுப்பு
ஊட்டி:
சுனாமி பாதித்த பகுதிகளில் பிணங்களை அகற்ற ராணுவ வீரர்கள் மறுத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறிய புகாருக்கு ராணுவம் மறுப்புதெரிவித்துள்ளது.
சுனாமி பாதித்த நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவம் மீட்புப் பணயில் ஈடுபடுத்தப்பட்டது. மீட்புப் பணியின்போதுஇறந்தவர்களின் உடல்களை அகற்ற ராணுவ வீரர்கள் மறுத்ததாக சட்டசபையில் ஜெயலலிதா சமீபத்தில் புகார் தெரிவித்தார்.
இந்தப் புகாரை ராணுவம் தற்போது மறுத்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய கமாண்டன்ட் பிரிகேடியர்ஏ.கே. அரோரா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சுனாமி பாதித்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
பாலங்கள் சீரமைப்புப் பணி, கட்டிக் கொடுக்கும் பணி, உப்புத் தண்ணீரை குடிநீராக மாற்றித் தருவது என தன்னலமற்ற பணிகளில் ராணுவவீரர்கள் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது இப்படிப்பட்ட புகாரைக் கூறியுள்ளது மன வருத்தம் தருகிறது, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில்ராணுவ வீரர்கள்தான் சிதிலமடைந்த வீடுகள், இறந்த உடல்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். அவர்கள் மீது இவ்வாறு கூறுவதுநியாயமல்ல என்றார் அரோரா.