ஜெயலட்சுமிக்கு தாராபுரம் நீதிமன்றம் சம்மன்
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:
செக் மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவகாசி ஜெயலட்சுமிக்கு, ஈரோடு மாவட்டம் தாராபுரம் துணைநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மணக்கடவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகராஜு என்பவர் ஜெயலட்சுமிக்கு ரூ. 2 லட்சம் கடனாகக்கொடுத்துள்ளார். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஜெயலட்சுமி ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை சண்முகராஜுவிடம்கொடுத்துள்ளார்.
அதை வங்கியில் போட்டபோது, ஜெயலட்சுமியின் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது. இதைத் தொடர்ந்து தாராபுரம்துணை நீதிமன்றத்தில் சண்முகராஜு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வருகிற 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications