காங். அரசை எதிர்த்து காங். எம்எல்ஏ உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சட்டசபை முன்உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாக காங்கிரஸ்கட்சி தெரிவித்தது. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் நிவாரண உதவிகள் தங்களுக்குக்கிடைக்கவில்லை என்று கூறி ஆங்காங்கே போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

இந் நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றுகூறி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அரசு கொறடாவுமான ராஜவேலு புதுவை சட்டசபை முன் உண்ணாவிரதம்இருந்தார்.

இதுகுறித்து ராஜவேலு கூறுகையில், புதுவையின் பல பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு இன்னும் முழுமையானஅளவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இவ்வாறு நடப்பதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை அரசுக்கு எடுத்துக் காட்டத்தான் உண்ணாவிரதம்இருந்தேன் என்றார்.

ராஜவேலுவுடன் திரளான மீனவர்களும் பங்கேற்றனர். காங்கிரஸ் அரசை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வேஉண்ணாவிரதம் இருந்ததால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+