ஜட்டியுடன் விடப்பட்ட வாலிபர்: "பிஸ்கட்" கொள்ளையர்கள் அட்டகாசம்
சென்னை:
மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் ஒரு வாலிபர் ஜட்டியுடன் பரிதவித்த நிலைஏற்பட்டது.
சென்னை வரும் ரயில்களில் மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிப்பது சகஜமான ஒன்று. மயக்க பிஸ்கெட் கொள்ளையர்களிடம் சிக்கிபலரும் பணம், பொருட்களை இழந்துள்ளனர்.
இந் நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வாலிபர், போட்டிருந்த ஜட்டியைத் தவிர அனைத்தையும் மயக்க பிஸ்கெட் கொள்ளையர்களிடம்இழந்துள்ளார்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் அனைவரும் சென்ற பின்னர் துப்புரவுத்தொழிலாளர்கள் ரயிலை சுத்தம் செய்யத் தொடங்கினர்.
அப்போது, ஒரு வாலிபர் ஜட்டியுடன் மயங்கிக் கிடந்ததை கண்ட ஊழியர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.கண் விழித்தபின்பு அவரிடம் போலீஸார் விசாரித்தபோது தெரிய வந்த தகவல்:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த வாலிபர். ஸ்ரீகாகுளத்தில் சோதனைக் கூடம்(லேப்) வைத்துள்ளார். சில பொருட்களை வாங்குவதற்காக சென்னை கிளம்பினார். ரிசர்வேஷன் செய்யாததால் பொதுப் பெட்டியில்ஏறியுள்ளார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
அந்த சமயத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் ஆந்திர நபருக்கு உட்கார இடம் கொடுத்துள்ளனர். சாப்பிட பிஸ்கெட்டும்கொடுத்துள்ளனர். அவ்வளவுதான், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாது.
அவரது பேண்ட்டில் வைத்திருந்த ரூ. 25,000 ரொக்கம், சட்டையில் இருந்த ரூ. 260 ஆகியவற்றை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள்,பேண்ட், சட்டை ஆகியவற்றையும் கழற்றிக் கொண்டு மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications