அதிமுகவினரை காப்பாற்ற முயற்சி: எச்.ராஜா
சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புள்ள அதிமுகவினரைக் காப்பாற்ற தமிழக அரசு தீவிரமாக முயற்சிப்பதாக பாஜக பொதுச் செயலாளர்எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தர்மபுரியில் 3 மாணவிகள் உயிரோடு வைத்து எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கின் முக்கிய ஆவணங்களைக் காணவில்லைஎன தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதன்மூலம், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவினரைக் காப்பாற்றஅரசு முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
அதிமுகவினரைக் காப்பாற்றும் பொருட்டும், இந்த வழக்கு கோர்ட்டுக்கே வராத வகையில் தடுக்கும் பொருட்டும் அரசின் தூண்டுதலின்பேரில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். கோப்புகளை தொலைத்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் கையாளாக தமிழக காவல்துறை செயல்படுகிறது. இது மிகவும் வெட்கக் கேடானது.
தனது எதிரிகளைப் பழிவாங்குவதற்கு சட்டம், அதிகாரத்தை அதிமுக அரசு பயன்படுத்துகிறது என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications