ரவியை மிரட்டிய விவகாரம்: நசீமாவுக்கு முன் ஜாமீன்
செங்கல்பட்டு:
ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் பெண் வழக்கறிஞர் நசீரா பானுவுக்கு செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம்நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் கிளைச் சிறையில் உள்ள ரவி சுப்பிரமணியத்தை சந்தித்து அவருக்கு மிரட்டல் விடுத்ததாக சங்கர மடத்தின் வழக்கறிஞர்களானநசீரா பானு, ரேவதி மற்றும் அவர்களை மிரட்டல் விடுக்கத் தூண்டியதாக வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம் ஆகியோர் மீதுபோலீசார் வழக்குப் பதிவு செய்யவுள்ளனர்.
ரவி சுப்பிரமணியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனால் மடத்தின் வழக்கறிஞர்கள் கைதாகும் சூழலும், சாட்சிகளைக் கலைக்க முயன்றதால் ஜாமீன் நிபந்தனையை மீறிவிட்டஜெயேந்திரரை ஏன் மீண்டும் கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகலாம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்ப நசீரா பானு முன் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, நசீரா பானு கைது செய்யப்பட்டால் ரூ. 5,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர்ஜாமீன்களில் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
நசீமா வெளிநாடுகளுக்கு போகக் கூடாது. புகார் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சியங்களைகலைக்க மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நசீமாவுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.
இதற்கிடையே, இந்தப் பிரச்சனை தொடர்பாக காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரைக் கண்டித்து கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர், வரும் திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications