விடுதலைப் புலிகள் மீது ஜெயலலிதா கடும் தாக்கு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.
ரோட்டரி அமைப்பின் சார்பில் ஜெயலலிதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய மாநாட்டு அரங்கில் நடந்த புதன்கிழமை இந்த விழாவில் ரோட்டரி சர்வதேச மாவட்ட ஆளுனர் பெஞ்சமின் செயன் விருதை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில்,
தமிழர்களைக் காக்கிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் வன்முறையைக் கையாளுகிறார்கள். தீவிரவாதச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
உலக அமைதிக்கு வன்முறை சரியான தீர்வாகாது. அதை ஒரு வழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. உலக அளவில் எழுந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.
சென்னை பெருநகர வளர்ச்சிக்காக ரூ. 18,000 கோடியில் பத்தாண்டுத் திட்டம் ஒன்றை நான் வகுத்துள்ளேன். உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற இந்தத் திட்டம் பேருதவி புரியும்.
குடிநீர், மின்சாரம், சாலைகள், போக்குவரத்து, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய இந்தத் திட்டத்தில் வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர மக்களே பங்கேற்கும் வகையில் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள் அமைப்பது, சாலை நடுவில் பூங்காக்கள் அமைப்பது, போக்குவரத்து சீரமைப்பு, குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்டவை மக்களின் ழுமையான பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் எனது அரசு மேற்கொண்டு வரும் நல்ல செயல்களை அங்கீகரிப்பதாகவே இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன் என்றார் ஜெயலலிதா.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications