2030: மக்கள் தொகை சீனாவை முந்தும் இந்தியா
Subscribe to Oneindia Tamil
ஐ.நா:
மக்கள் தொகையில் 2030 -ம் ஆண்டுக்குள் சீனாவைத் தோற்கடித்து இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும் என்று ஐ.நா. சபை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையின்படி, 2030-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா, சீனாவை முந்திவிடும்.
கடந்த வருடம் இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியே 30 லட்சமாகும். 2050-ம் ஆண்டுக்குள் இது 159 கோடியே 30 லட்சமாக உயர்ந்துவிடும்.
சீனாவின் கடந்த வருட மக்கள் தொகை 131 கோடியே 60 லட்சமாகும். 2050-ம் ஆண்டில் இது 139 கோடியே 20 லட்சமாக உயரும்.
2030ல் சீனாவை மக்கள் தொகையில் தோற்கடிக்கவுள்ளது இந்தியா.
அதாவது 2050ம் ஆண்டில் சீனாவை விட இந்தியாவில் 20 கோடி பேர் அதிகமாக இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications