For Daily Alerts
Just In
அமைச்சர் விஜயலட்சுமிக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் !!
சேலம்:
அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமியின் முகத்தில் ஆசிட் வீசப்போவதாக செல்போனில் மிரட்டல்வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் விஜயலெட்சுமி சேலம் சூரமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
நேற்று முன்தினம் இரவு அமைச்சரின் கணவரின் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு ஆசாமி,உன் மீதும், உன் மனைவி மீதும் ஆசிட் வீச சிலர் திட்டமிட்டுள்ளனர். உஷார்! என்று எச்சரித்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சரின் கணவர் பழனிச்சாமி, உடனடியாக போலீசில் புகார் செய்துள்ளார்.போலீஸார் விரைந்து வந்து செல்போனில் பேசிய மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அமைச்சரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, February 26, 2005, 5:30 [IST]