கட்சியை திமுகவிடம் அடகு வைத்த காங்.: புதுவை அதிமுக சாடல்
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை திமுகவிடம் ஒட்டுமொத்தமாக அடகு வைத்து விட்டது அக்கட்சியின் மேலிடம்என்று பாண்டிச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்யத்துணிந்து விட்டது காங்கிரஸ் மேலிடம். இதற்காக தமிழகத்தில் தனது கட்சியை திமுகவிடம் ஒட்டுமொத்தமாகஅடகு வைத்து விட்டது.
ஆட்சியில் பங்கு கேட்போம் என்று மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறுகிறார். ஆனால் அப்படி கேட்கக் கூடாது,அப்படி கேட்க யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை என்று கட்சி மேலிடம் கூறுகிறது.
இப்படி கூறியுள்ளதன் மூலம், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் கருத்தை வெளியிடக் கூட உரிமைஇல்லை, பேசக் கூட அதிகாரம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியினருக்கு தன்மானம் இருந்தால் அக்கட்சியிலிருந்து விலக வேண்டும் என்றார் அன்பழகன்.