For Daily Alerts
Just In
குருமூர்த்தி மனு: விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
பிரபல ஆடிட்டரும், கட்டுரையாளருமான குருமூர்த்தி, தன் மீது காஞ்சிபுரம் போலீஸார் பதிவு செய்துள்ளவழக்குக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 1ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் தவறான தகவல்களைக் கூறி விசாரணையைத் திசை திருப்பியதாக கூறி குருமூர்த்திமீது தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குக்கு தடை விதிக்கக் கோரி குருமூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைசென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சிவசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மார்ச்1ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
Comments
Story first published: Sunday, February 27, 2005, 5:30 [IST]