பிகார் தேர்தல் முடிவு: கருணாநிதி வருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிகாரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் அங்கு எந்தக் கட்சிக்கும்பெரும்பான்மை கிடைக்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
காங்கிரஸ், பாஸ்வானின் கட்சி மற்றும் லாலு பிரசாத் யாதவ் இடையே கூட்டணி உருவாகியிருந்தால் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு இந்தத்தோல்வி ஏற்பட்டிருக்காது.
காங்கிரஸ் தலைமை அல்லது மாநில காங்கிரஸ் தலைமையால் தான் கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றுநினைக்கிறேன்.
எனது உடல் நிலை நல்லபடியாக இருந்திருந்தால் லாலுவிடம் பேசி மதசார்பில்லாத கட்சிகள் ஒருவரோடு ஒருவர் மோதுவதைத் தவிர்க்கமுயற்சித்திருப்பேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications