ஜாமீன் நிபந்தனை: தளர்த்த கோரும் ஜெயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி சென்னைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு செய்யவுள்ளார்.
இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஜெயேந்திரருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஒவ்வொருசெவ்வாய்க்கிழமையும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் முன் ஆஜராக வேண்டும். தேவைப்படும்போதெல்லாம்விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனைகள் விதித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தினகர் கூறுகையில், தனிப்படை போலீஸார் முன் ஜெயேந்திரர் ஆஜராக வேண்டியநேரம், அவர் பூஜை செய்யும் நேரமாகும். எனவே நிபந்தனையை தளர்த்துமாறு கோரி மனு செய்யவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications