திண்டுக்கல் மாநாட்டுக்கு தயாராகிறது திமுக
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டுக்கான ஏற்பாடுகள் படு மும்முரமாக நடந்துவருகின்றன.
திண்டுக்கல் அருகே, மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் கணிக்கம்பட்டி என்ற இடத்தில் வருகிற 12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில்திமுகவின் தென் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் பல லட்சம் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 1 லட்சம் பேர் அமரும்வகையிலான பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு வருகிறது.
800 அடி நீளம், 500 அடி அகலத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு நுழைவாயில் ரூ. 15 லட்சம் செலவில் படுபிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. ரோமன் நாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 500 அடி அகலத்தில் நுழைவாயில்அமைக்கப்படுகிறது.
இதுதவிர தலைவர்கள் அமரும் பந்தலும் சில லட்சம் செலவில் படு அலங்காரத்துடன் தயாராகியுள்ளது.