மருத்துவமனை வாசலில் பிரசவித்த பெண் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வாசலில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
சென்னை அருகே உள்ள குன்றத்தூரைச் சேர்ந்தவர் வள்ளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பஸ் மூலம்கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய வள்ளி, அங்குள்ள சுரங்கப் பாதை வழியாக மருத்துவமனைக்குகொண்டுவரப்பட்டார். அப்போது வாசலிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அங்கேயே வள்ளிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்வள்ளி. பின்னர் அவரை ஸ்டிரெச்சர் மூலம் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications