For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிகோர்ட் விஸ்தரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிநீதிமன்றம் விஸ்தரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 14ம் தேதி தொடங்கவிருக்கிறது. அன்றைய தினம் நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தனி நீதிமன்றத்தில் தற்போது 150 பேர் வரை அமரலாம். இதை 250 பேர் வரை அமர்வதற்கு வசதியாக மாற்றும் பணி தற்போதுநடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மற்றும் சாட்சிகள் நிற்க கூண்டு அமைக்கப்படும்.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெயலலிதாவுக்கு தனி வழி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தில் தற்போதுஇரு வழிகள் உள்ளன. இதில், ஒரு வழியை பொதுமக்களுக்கும், மற்றொரு வழியை ஜெயலலிதா உள்ளிட்டோருக்கும் ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X