திமுக-காங் மோதல் ஒரு நாடகம்: பாஜக
திருவண்ணாமலை:
திமுக-காங்கிரஸ் மோதல் ஒரு நாடகம் தான் என பாஜக கூறியுள்ளது.
திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக அகில இந்தியச் செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம்கூறியதாவது:
இன்றைய தேதியில் பாஜகவுக்கு தமிழகத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படும்கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம்.
தேர்தலின்போது அதிக இடங்களை கேட்டு வாங்குவதற்கு முன்னோட்டமாகத் தான் கூட்டணி ஆட்சி பற்றி பேசுகிறார்கள். தமிழகத்துக்குகூட்டணி ஆட்சியெல்லாம் ஒத்து வராது. தனிக் கட்சி ஆட்சி தான் சரிப்பட்டு வரும். தமிழக மக்கள் தெளிவாக வாக்களிப்பார்கள்.யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலை எல்லாம் இங்கு வரவே வராது.
கூட்டணி ஆட்சி விஷயத்தில் திமுக-காங்கிரஸ் மோதல் ஒரு நாடகம் தான்.
மத்திய அமைச்சரவையில் இருந்து இளங்கோவன் நீக்கப்பட்டால் அவர் தியாகிகள் பட்டியலில் இடம் பெறுவார். அதே போல மத்தியஅரசில் இருந்து இளங்கோவன் நீக்கப்பட்டால், தனக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை திமுக காட்டிக் கொள்ளலாம்.
எங்களுடன் திமுக கூட்டணி வைத்தபோது 3 வருடம் கழித்துத் தான் பிரச்சனை தந்தது. ஆனால், காங்கிரசுக்கு ஒரு வருடத்துக்குள்ளேயேபிரச்சனை தந்துவிட்டது.
தமிழ்ப் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை மிரட்டுகிறார்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து வெற்றிக் கொடி நாட்டுவதெல்லாம் இயலாத காரியம். டாக்டர் ராமதாஸை மிரட்டுவதற்காகவே அவர்அப்படிக் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதில் அவர் வெற்றியடைய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். விஜய்காந்த் கட்சியால்மக்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்றார் இல.கணேசன்.