சிபு சோரன் டிஸ்மிஸ்: முண்டா மீண்டும் முதல்வர்
ராஞ்சி & டெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபு சோரன் அரசை டிஸ்மிஸ் செய்வது என நேற்று இரவு நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபு சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய முதல்வராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அர்ஜூன் முண்டா இரண்டாவது முறையாகப் பதவியேற்கிறார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ்- முக்தி மோர்ச்சா கூட்டணியின் தலைவர்சிபு சோரன் முதல்வராகப் பதவியேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கவர்னர் சையது ராஸியின் உத்தரவுப்படி சிபு சோரன், 15ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11ம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நிரூபிக்க வேண்டும்என உத்தரவிட்டது.
இதையொட்டி ஜார்கண்ட் அமைச்சரவை 10ம் தேதி கூடியது. அன்று புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இதன் பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக சட்டசபை கூடியது. ஆனால் அடுத்தடுத்து ரகளை ஏற்பட்டதால்பலமுறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 15ம் தேதிக்கு சட்டசபையை தற்காலிக சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று சிபு சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவில்லை. இதனையடுததுஜார்கண்ட் பிரச்சினையில் அரசியல் சட்டசிக்கல் எழுந்தது.
இதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு அவசரமாக அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையைக்கூட்டி ஜார்கண்ட் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் சிபு சோரன் அரசை பதவி விலகுமாறு கேட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பபட்டது. இந்த தகவலை கூட்டம்முடிந்தததும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார். இதனையடுத்து சிபு சோரன் தனது பதவியை ராஜினாமாசெய்தார்.
இந் நிலையில் புதிய முதல்வராக தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றத் தலைவர் அர்ஜூன் முண்டா இன்றுபதவியேற்கிறார். இவர் சட்டசபையில் தனது பெரும்பான்மையை வரும் 21ம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர்உத்தரவிட்டுள்ளார்.