சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: ஜெ அறிவிப்பு
சென்னை:
சத்துணவு திட்ட அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று அவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வாசித்தார்.
அதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையல்காரர்கள் ஆகியோரது கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ரூ.330 வரை ஊதிய உயர்வை பட்ஜெட்டில் அறிவித்தோம்.
அதேபோல, பணியாளர் பணிக்கொடைக்காக, அரசின் பங்களிப்புத் தொகையை ரூ. 5000ல் இருந்து ரூ. 10,000 ஆக உயர்த்திபட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந் நிலையில் சத்துணவுத் திட்ட அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களும் அடித்தட்டு நிலையில்தான் இருக்கிறார்கள்என்பதால் தங்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வந்தது.
இக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து தற்போது அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
அதன்படி சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், மாதம் தலா ரூ. 322 ரூபாய் ஊதிய உயர்வுஅளிக்கப்படுகிறது.
இதன் மூலம் இதுவரை மாதம் ரூ. 1,513 ஊதியம் பெற்று வந்த இவர்கள், இனிமேல் ரூ. 1,835 ஊதியம் பெறுவார்கள். இதன் மூலம்84,473 ஊழியர்கள் பயன்பெறுவர். அரசுக்கு கூடுதலாக ரூ. 32.64 கோடி செலவாகும்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளாவை விட தமிழகத்தில் தான் சத்துணவுத் திட்ட அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அதிகஊதியம் பெறுகிறார்கள் என்றார் ஜெயலலிதா.