சென்னை- திண்டிவனம் 4 வழி நெடுஞ்சாலை நாளை திறப்பு
சென்னை:
சென்னை தாம்பரத்திலிருந்து திண்டிவனம் வரையிலும் அமைக்கப்பட்டுள்ள 4 வழி தேசிய நெடுஞ்சாலையைதிமுக தலைவர் கருணாநிதி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள், புதிய சாலைகள் அமைக்கும் பணி,மேம்பாலங்கள் கட்டும் பணி ஆகிய நிகழ்ச்சிகளை சமீப காலமாக திமுக தலைவர் கருணாநிதிதான் தொடங்கிவைக்கிறார்.
அந்த வரிசையில், தாம்பரத்திலிருந்து திண்டிவனம் வரையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்குஅர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு பரனூர் சுங்க கட்டண வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர்கருணாநிதி கலந்து கொண்டு போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். மத்திய தரைவழிப் போக்குவரத்துஅமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்குகிறார்.
தாம்பரம் முதல் திண்டிவனம் வரையில் 4 வழிப் பாதையாக மேம்படுத்தப்பட்டுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலை,93 கிலோமீட்டர் நீளம் கொண்டது. சாலையின் அகலம் 7 மீட்டரிலிருந்து 17 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.