சென்னையிலிருந்து கோடை கால சிறப்பு ரயில்கள்
சென்னை:
கோடைகால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி,மங்களூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள்விடப்படுகின்றன.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண் 0611): மார்ச் 20, 24, 27, 31 ஆகிய நாட்களில்இரவு 8.30க்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 0612): நாகர்கோவிலிலிருந்து மார்ச் 18, 21, 25,28, ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் மாலை 4.30க்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை,விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இதேபோல, சென்னை எழும்பூர்-நெல்லை இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் (0615) ரயில், மார்ச் 18, 25, ஏப்ரல் 1ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 11.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
நெல்லை-சென்னை எழும்பூர் இடையிலான எக்ஸ்பிரஸ் (0616) மார்ச் 19, 26, ஏப்ரல் 2 ஆகிய நாட்களில் மாலை 5மணிக்குப் புறப்பட்டு மறு நாள் காலை 7.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இதேபோல, சென்னை சென்ட்ரல்-மங்களூர் (0601) இடையே மார்ச் 18, 25, ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் மாலை 5மணிக்குப் புறப்பட்டு மறு நாள் காலை 8.45 மணிக்கு மங்களூர் சென்றடையும்.
மங்களூர் -சென்னை சென்ட்ரல் இடையிலான ரயில் (0602) மார்ச் 20, 27, ஏப்ரல் 3 ஆகிய நாட்களில்மங்களூரிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் காலை 8 மணிக்கு சென்னை வந்தடையும்.












Click it and Unblock the Notifications