11 கோரிக்கைகள் என்னாச்சு? கருணாநிதிக்கு ஜெ. பதிலடி
சென்னை
மத்திய அரசுக்கு திமுக கூட்டணி முன்வைத்த 11 கோரிக்கைகளில் ஒன்று கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லையே, இதற்குதிமுக தலைவர் கருணாநிதி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே சனிக்கிழமை நடந்த நான்கு வழிப் பாதை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய கருணாநதி, திமுகஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், மக்கள்நிலத் திட்டங்களில் அதிமுக அரசு ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கூறியிருந்தார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுசெப்டம்பர் 7ம் தேதி கருணாநிதி தலைமையில் கூட்டப்பட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் மத்திய அரசிடம்வலியுறுத்திப் பெற வேண்டிய 11 கோரிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதை செயலாக்க செயலாக்கக் குழுவும்அமைக்கப்பட்டதாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டி கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் அதற்குப் பிறகு தனக்கு வேண்டிய துறைகளை அடம் பிடித்து, சண்டை போட்டு, காங்கிரஸிடமிருந்து பெற்றுக் கொண்டகருணாநிதியும், அலங்காரப் பொம்மைகள் போல மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12அமைச்சர்களும் சேர்ந்து, கடந்த 6 மாதமாக இந்த 11 கோரிக்கைகளை நிறைவேற்ற என்ன செய்தார்கள் என்பதை மக்களுக்குவிளக்க முடியுமா?
தங்களுக்கு வேண்டிய துறைகளை சண்டித்தனம் செய்து கேட்டுப் பெற முடிந்த இவர்களால் 6 மாதமாகியும் இந்தக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதது ஏன்? கிணற்றில் போடப்பட்ட கற்களாக இவை அனைத்தும் அப்படியே கிடக்கின்றன.
இதேபோல, நதி நீர் இணைப்புத் திட்டம், எண்ணூ
மாநில அரசைக் குறை கூறுவதிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கும் கருணாநிதியும், அவரது கூட்டாளிகளும், இந்தத்திட்டங்களை ஏன் நிறைவேற்றவில்லை என்று மத்திய அரசிடம் சண்டை போடட்டும்.
கச்சத் தீவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எம்.பிக்கள் குழுவை அமைக்கக் கோரினேன். அதையும் மத்திய அரசு செய்யவில்லை.விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சிலரை பல நாள் ஏமாற்றலாம், பலரைசில நாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும், எல்லா நாளும் ஏமாற்ற முடியாது. இதை திமுக கூட்டணியில் உணர வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.