போலீஸாருக்கு ஆதரவாக கருணாநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சலுகைகள்போதாது. இன்னும் கூடுதலாக சலுகைகளைத் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.

போலீசாருக்கு ஜெயலலிதா சலுகைகளை அள்ளி வழக்குவது வழக்கம். இதை திமுக எதிர்ப்பதும், இதே போன்றசலுகைகளை பிற அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோருவதுவழக்கம்.

இந்த வழக்கத்துக்கு மாறாக,போலீஸாருக்கு மேலும் கூடுதலாக சலுகைகள் தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார் கருணாநிதி.

காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு விடுப்பு ஈட்டுப்படி, உணவுப் படி, சீருடைப் படிஆகியவற்றை உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுப்பு ஈட்டுப் படியை ரூ. 100லிருந்து ரூ. 150 ஆக அரசுஉயர்த்தியுள்ளது. இதை ரூ. 200 ஆக உயர்த்தித் தர வேண்டும். இதே சலுகை தீயணைப்புப் படையினருக்கும் தரவேண்டும்.

சீருடைப் படியைப் பொருத்தவரை ரூ. 100 ஆக உயர்த்தியிருப்பதற்குப் பதிலாக ரூ. 150 ஆக தொகையை உயர்த்தவேண்டும்.

தற்போதைய விலைவாசி நிலவரத்தைக் கணக்கில் கொண்டு உணவுப் படியை ரூ. 55லிருந்து ரூ. 75 ஆக உயர்த்தவேண்டும் என்று கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+