மோடி முஸ்லீம்களுக்கு எதிரானவர் அல்ல: நாயுடு
சென்னை:
நரேந்திர மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று சில முட்டாள்கள் தான் கூறுகின்றனர் என பாஜக மாஜி தலைவரான வெங்கையாநாயுடு கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய காப்புரிமை (பேடண்ட்) சட்டத்தால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை பயங்கரமாக உயரும்.கேன்சர், இதய நோய்க்கான மருந்துகள் இப்போது ரூ. 12,000க்கு விற்கப்படுகிறது. இதன் விலை அமெரிக்காவுக்கு இணையாக ரூ. 1.2லட்சமாக உயரும் அபாயம் உள்ளது.
இதனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்படப் போகிறார்கள்.
சாதாரண மக்களுக்கு எதிரான இந்த காப்புரிமை சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்திருப்பதுவருத்தத்துக்குரியது. இதன்மூலம் மக்களை கம்யூனிஸ்டுகள் நன்றாக ஏமாற்றிவிட்டார்கள்.
பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 1,690 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் நெடு நாட்களாகத் தேங்கிக் கிடந்த6,07,262 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 4 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த நீதிமன்றங்களுக்கு காங்கிரஸ்அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.இதனால் வரும் மார்ச் 31ம் தேதியோடு அவை மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் உடனே தலையிட்டு நிதிஒதுக்க வேண்டும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அவருக்கு அமெரிக்கா விசா மறுத்தது கண்டிக்கத்தக்கது. அவர்மீது வழக்கோ, எப்ஐஆரோ, விசாரணையோ அல்ல. விசாவை மறுக்க அமெரிக்கா சொல்லும் காரணம் ஏற்கத்தக்கதல்ல.
மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று சில முட்டாள்கள் தான் கூறுகின்றனர் என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications