ஜெயலட்சுமி: சிபிஐ 2வது குற்றப்பத்திரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜெயலட்சுமி தொடர்பான இரண்டாவது வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அடுத்த வாரம் சிபிஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யவுள்ளனர்.

ஏட்டு முதல் எஸ்.பி வரை 20க்கும் மேற்பட்ட போலீஸார் மீது செக்ஸ் புகார் கூறிய ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். ஜெயலட்சுமி கூறிய பாலியல் புகார்களை ஒரு வழக்காகவும், ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸார்கடத்தியது தொடர்பான புகாரை இன்னொரு தனி வழக்காகவும் விசாரித்து வருகிறது சிபிஐ.

இதில் முதல் வழக்கில் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந் நிலையில்ஜெயலட்சுமியை காக்கிச் சட்டைகள் கூட்டு சேர்ந்து கடத்திய வழக்கிலும் அடுத்த வாரம் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்படவுள்ளது.

இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்பட்டுள்ளதால், அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதிகோரி அரசுக்கு சிபிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் டி.எஸ்.பி. பதவிக்குக் கீழே உள்ளோர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசு அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசுபதில் அனுப்பிவிட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் குற்றப் பத்திரிக்கையை தாக்கலாகிறது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, ஷாஜகான், ஏட்டுகண்ணன் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஜெயலட்சுமி பாலியல் புகார்களைக் கூறிய காவல்துறை அதிகாரிகள் மீதான விரிவான விசாரணை அறிக்கை ஏப்ரல் 4ம்தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+